Tuesday, November 13, 2007

இது எங்க ஏரியா உள்ள வராதே!!

இப்படி ஒரு தலைப்பை பார்த்து நான் ஏதோ ரொம்ப ஒரு நல்ல ஏரியால இருந்து ராஜாங்கம் பண்ணிக்கிட்டு வேற யாரையும் உள்ள விடலைனு நெனசீங்கன்னா அது தப்பு....

இருபத்து நாலு வருஷமா அந்த ஏரியால குப்பை கொட்டிட்டு (வாழ்ந்துட்டு) வெறுப்புல எச்சரிக்கிற ஸ்டேட்மென்ட் அது. ஆவடி-னு ஒரு இடத்தை சென்னை-ல சில பேர் கேள்விப்பட்டிருக்கலாம், பல பேருக்கு அது ஒரு டிபென்ஸ் ஏரியா-னு தெரிஞ்சிருக்கலாம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில ஒரு பகுதிய பத்தி தான் சொல்றேன். ஆவடி-ல காந்தி நகர்-னு ஒரு ஏரியா இருக்குங்க, அங்க நாங்க சாதாரணமா தண்ணி-னு (drinking water தான்) சொல்லவே மாட்டோம். நல்ல தண்ணி உப்பு தண்ணி-னு பிரிச்சு தான் எல்லாத்துக்கும் சொல்ல வேண்டி இருக்கும். குடிக்கிறதுக்கு மட்டும் நல்ல தண்ணி, மத்த எல்லாத்துக்கும் உப்பு தண்ணி தான்.

உப்புன்னா உங்க வீட்டு எங்க வீட்டு உப்பு இல்லேங்க, அங்கே ஒரு உப்பளம் ஆரம்பிச்சா நல்ல வருமானம் வரும், அப்படி கடல் தண்ணி அளவுக்கு கரிக்கும். ஒரு வேளை பல வருஷத்துக்கு முன்னாடி அங்கே கடலோட extension இருந்துச்சோனு யோசிக்கிற அளவுக்கு இருக்கும். எங்க ஏரியால ஒரு வீட்டுல கிணறு தோண்டினா அல்லது போர்வெல் போட்டா மொத்த ஏரியாவும் அந்த ரிசுல்டுக்காக காத்திருக்கிறதை பார்த்தா ஏதோ ஒரு லேபர் ரூம் வெளியே ரிசுல்டுக்கு டென்ஷனா வெயிட் பண்ணற அப்பாவை விட ஜாஸ்தியா இருக்கும். இப்படியே ஆளாளுக்கு இன்னும் ஜாஸ்தி தோண்டினா நல்ல தண்ணி கிடைக்கும்னு நெனச்சு தோண்டி ஒரு நாள் இல்ல ஒரு நாள் விவேக் காமெடில வர்ற மாதிரி மெக்சிகன் ஆளு ஒருத்தன் எங்க ஏரியால கிணறு வழியா வந்துருவான்.

ஒவ்வொரு எலெக்க்ஷன்க்கும் வர்றவன் எல்லாம் வோட்டு கேக்குறதே இதை வச்சு தான். பாவம் எங்க மக்கள், இவன் செஞ்சுருவான்னு நம்பி ஏமாந்து போனது தான் மிச்சம் இது வரை நல்ல தண்ணி வந்த பாடு இல்ல. எங்க அப்பா அங்கே இருக்கிற tank factory -ல வேலை செய்யுறதால அங்கே பக்கமா வீடு இருக்கணும்னு நெனச்சு இந்த வீட்டை வாங்கினாங்க. அப்பா சிட்டியில பிறந்து வளர்ந்ததால அமைதியான, பசங்க safe -ஆ ஸ்கூல் போய்ட்டு வர்ற மாதிரியான இடம்னு ஆசைப்பட்டு வாங்கினாங்க. இந்த பிரச்சனைய தீர்க்க எங்க township -ல எவ்வளவோ சண்டை போட்டு பார்த்துட்டாங்க, ஒண்ணும் நடக்கல. இதுல கூத்து என்னன்னா இவ்ளோ போராடி எங்க பக்கத்து தெருவுல எல்லாம் குழாய் வசதி வந்து அஞ்சு வருஷம் ஆச்சு, ஆனா எங்க தெரு மட்டும் என்னவோ தெரியல பல காரணங்களால அதே நிலைமையில தான் இருக்கு.

எங்களுக்கு ஒரே ஒரு சோர்ஸ் OCF (Ordinance Clothing Factory) குவார்டர்ஸ் தான். அங்கே இருக்கிற தெரிஞ்சவங்க எங்களுக்கு தினமும் நாலு குடம் தண்ணி குடுப்பாங்க. அந்த புண்ணியத்துல கொஞ்ச வருஷங்கள் ஓடிச்சு, அப்புறம் நல்ல மனசு படைச்ச யாரோ அந்த ஏரியா மக்கள் குவார்டர்ஸ்-ல தண்ணி பிடிக்கிறது அவங்களுக்கு தொந்தரவா இருக்குன்னு பாக்டரி மாநேஜ்மேன்ட்க்கு லெட்டர் எழுதி போட்டு அந்த மாதிரி தண்ணி கொடுக்குறவங்களுக்கு தண்டனைங்கற அளவுக்கு போனதும் எங்க மக்கள் அங்கே போறத நிறுத்திட்டாங்க. அப்போல்லாம் தூங்கி எழுந்தா முதல்ல முழிக்கிறது புக்-ல அதுக்கபுறம் தண்ணி குடம்-னு இருந்தது. கொஞ்சம் வருஷத்துக்கு அப்பா பல விதத்துல try பண்ணி தண்ணி எடுத்துக்கிட்டு வருவாங்க. TVS-50 ல முன்னாடி பெரிய கேன் வச்சு, அப்பா முதல் முதலா வாங்கின சைக்கிள்-ல பின்னாடி கயிறுல 2 குடம் கட்டி தொங்க விட்டதுனு நிறைய methods முயற்சி பண்ணி இருக்காங்க.

அதுக்கபுறம் புண்ணியவானுங்க (தண்ணி லாரி தான்) எங்க ஏரியாக்கு சப்ளை பண்ண ஆரம்பிச்சாங்க. ஒரு குடம் Rs.2 க்கு. ஒரு பாரல் தண்ணி Rs.20. ஹப்பாடான்னு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். அதுக்கப்புறம் குடத்துல முழிக்க வேண்டிய சாபத்துல இருந்து விடுபட்டோம். காலைல 7 மணில இருந்து 8 மணி வரை சாரை சாரையாக எங்க மக்கள் அந்த குவார்டர்ஸ்-ல இருந்து ஏதோ நாட்டை வீழ்த்தி அந்த நாட்டு செல்வத்தை தங்கள் நாட்டுக்கு எடுத்துகிட்டு வர்ர மாதிரி ஒரு தெம்போடு எடுத்துக்கிட்டு வருவாங்க - அந்தக்காட்சி எல்லாம் இன்னும் கண்ணுல அப்படியே நிக்குது.

இங்க (USA) ல நயாகராவை முதல்ல பார்த்தப்போ இதுல கொஞ்சம் வெட்டி கொண்டு போய் எங்க ஏரியா-ல பிக்ஸ் பண்ணிடலாம் போல பொறாமையா இருந்தது. இங்க வந்த புதுசுல நான் தண்ணிய ரொம்ப சிக்கனமா உபயோகப்படுத்துவதை பார்த்து 'என்னவர்' அப்படி சிரித்தார். அப்புறம்தான் மெதுவா மாறி தண்ணிய தண்ணியா செலவு பண்ண ஆரம்பிச்சேன். இப்பவும் யோசிச்சு பார்த்தா தப்பு பண்றோமோன்னு சின்னதா ஒரு உறுத்தல் இருக்கு. இங்க இருந்துட்டு மறுபடியும் சென்னை போனா எப்படி தண்ணி பிரச்சனைய சந்திக்க போறோமோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் !!!

No comments:

Number of online users in last 3 minutes
westgate resorts


Total User Hits
Free Hit Counter